The independent woman
May 28, 2019
Story
இந்தியாவில்,தமிழ் நாட்டில் பெண்கள் பயமின்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வசதியாக முழுவதும் பெண்களால் செயல் படும் காவல் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன.காவல் நிலையங்கள் ஆண்களின் காவல் நிலையத்தினை விட மிக குறைவாக இருப்பதால்.மாவட்ட மகளிர் காவல் நிலையங்கள் ,புகார் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள சரக காவல் நிலையத்தின் பதிலை வைத்துதான் புகார் எடுப்பது பற்றி முடிவு எடுக்கின்றன. பெண் காவல் ஆய்வாளர்களுக்கு தனியாக ஜீப் கூட வழங்குவது இல்லை.ஆண்களின் ஆதிக்க கட்டுப்பாட்டில்தான் புகாரை பெறுவது பற்றி முடிவுகள் எடுக்கின்றன.அப்படி,என்றால் ஆண் ஆதிக்க கட்டுப்பாடுகள் இருந்தால் பெண் காவல் நிலையங்கள் அமைத்ததன் உயரரிய நோக்கமே வீணாகி விடுகின்றன. ஆய்வாளர்கள் பெண் ஆய்வாளருக்கு நெருக்கடிகளை தருவதால் புகாரை வாங்க மறுக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணுடைய பிரச்சனை வெள்ளவேடு ,ஆண் காவல் நிலையமாக,அருகே இருந்தாலும் புகார் அனைத்து மாவட்ட மகளிர் காவல் நிலையமாக இருந்தாலும்,அவற்றை வேறு காரணம் கூறி மறுத்துவிடுகின்றன.இதற்கு இதுவரை மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எதுவும் எடுக்காதது வருத்தத்தினை அளிக்கின்றது.